Tuesday, December 21, 2010

பொம்மைகளின் பிரிய‌ம்


ப‌ச்சைக்கு காத்திருக்கும்
கண நேர‌த்தில்
முன் சென்ற சீருந்தின்
பின்புற க‌ண்ணாடியில்

ஒரு யானையும் ஒட்ட‌க‌ச்சிவிங்கியும்
முக‌வாயும் க‌ண்க‌ளும் காதும் ம‌ட்டும்
க‌ருமை பூசிய நாய்க்குட்டியும்
த‌த்த‌ம் பாவனையில் வெளியுல‌கை
நோட்ட‌மிட்ட வ‌ண்ண‌மிருந்த‌து

காத்திருப்பின் நொடிக‌ள்
ஒடிய ஒடிய ஒரு கணம்
வேக‌மெடுத்த முன்வ‌ண்டியில்
அவை மூன்றும்
எந்த ம‌ழ‌லைப் பிரிய‌த்தை
வீட்டோடு விட்டு வ‌ந்த‌தோ

ஏக்க‌ங்க‌ளையும் க‌ண்ணில் ப‌துக்கி
முன் செல்லும் வ‌ண்டியை
வீடு நோக்கி
பின்னே இழுத்துக் கொண்டிருந்த‌து

20 comments:

Gowripriya said...

அருமை... ஒரு நிகழ்வு கண் முன் விரிகிறது :)

ச.முத்துவேல் said...

கடைசி வரிகளுக்கு முன்னால்வரை அதுவொரு கவனத்தை ஈர்க்கும் காட்சியின் பதிவுதான். ஆனால், கடைசிவரிதான் கவிஞரின் வெளிப்பாடு.வெகுவாக ரசிக்கமுடிகிற கவிதை.

நேசமித்ரன் said...

ரொம்ப நாள் கழித்து திருப்தியான கவிதை உங்கள் தளத்தில் . ஒரு சொல் எடுத்தாலும் கலைந்து விடும் கச்சிதத்துடன் :)

ஹேமா said...

பொம்மைகளின்
பிரியமா ஏக்கமா வரிகளில் !

கலாநேசன் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...அதுவும் கடைசி நாலு வரிகள் மிக ஈர்க்கிறது.

ராகவன் said...

லாவண்யா,

அருமையான கவிதை லாவண்யா... முத்துவேல் சொன்னது மாதிரி... கவிதை மொத்தமும்... கடைசி வரியில்.

அன்புடன்
ராகவன்

வெங்கட் நாகராஜ் said...

காட்சியை கண்முன் நிறுத்தும் நற்கவிதை. பகிர்வுக்கு நன்றி.

கோவை2தில்லி said...

அழகான கவிதை.

அஹமது இர்ஷாத் said...

அழ‌கான‌ ப்ரிய‌ங்க‌ள் வ‌ரிக‌ளில்..

வைகறை said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

pon.vasudevan said...

நல்ல கவிதை-

சே.குமார் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

chandru / RVC said...

லாவண்யா, முத்துவேலை வழிமொழிகிறேன். கடைசி வரிகள் அருமை..! தொடருங்கள்.

Vel Kannan said...

எத்தனை முறை பார்த்திருக்கிறேன்.
மிக அழகாய் மென்சோகத்துடன் சொல்ல முடிந்த உங்களுக்கு
வாழ்த்துகளும் நன்றியும்

சிவகுமாரன் said...

உங்கள் தமிழ்த் திமிருக்கு தலை
வணங்குகிறேன்.

பா.ராஜாராம் said...

விடுபட்டு போயிருந்த கவிதைகள் எல்லாம் வாசித்தேன் சகோ.

செம்ம ஃபாரம் போல,

மழை நனைக்கவியலாத நதியோர மணல் போல!

விஜய் said...

அட்டகாசமான கற்பனை

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

asiya omar said...

அருமையான கவிதை,கவிதை போலும் இல்லை,கவிதை தான்.

உயிரோடை said...

கௌரி, முத்துவேல், நேசமித்திரன், ஹேமா, கலாநேசன், ராகவன், வெங்கட் நாகராஜ், கோவை2தில்லி, அஹமது இர்ஷாத், வைகறை, பொன்.வாசுதேவன், சே.குமார், சந்துரு, வேல் கண்ணன், சிவ குமாரன், பா.ரா அண்ணா, விஜய், ஆசியா ஒமர் அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

Raja said...

நெகிழ்வான உணர்வை வார்த்தைகளில் நேர்த்தியாக வடித்திருக்கிறீர்கள்....வாழ்த்துக்கள்....