
சிற்றெறும்புக் கூட்டத்தின்
இரைக்கான அலைச்சலில்
எப்போதும் எறும்பாக
இருந்தில்லையிவள்
உண்மை விளம்புதலை தவிர
சாயம் பூசிய நாடகத்தின்
எந்த கதாபத்திரமும்
இவளது எதுவுமில்லை
இருப்பினும்
மென்பாசிக் குளத்தில்
கேள்விக் குறியென
மிதக்கும் வாத்திடமும்
இருக்கக்கூடும்
இவளை பற்றிய சந்தேகங்கள்
5 comments:
நல்ல பகிர்வு....
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
அருமை... அருமை...
'மென்பாசிக் குளம்' இறைச்சி அணியாக அமைந்து, இக் கவிதையைச் சங்கப் பாக்களுக்கு நிகர்நிமிர்த்தி, ஒரு தோழி கூற்றாகவோ அல்லது தலைவி கூற்றாகவோ உணரத் தருகிறது. வாழ்க!
/இருப்பினும்
மென்பாசிக் குளத்தில்
கேள்விக் குறியென
மிதக்கும் வாத்திடமும்
இருக்கக்கூடும்
இவளை பற்றிய சந்தேகங்கள்/
எப்படி, இப்பவும்.. இப்படி? என்ற சந்தேகக் கேள்வியோ!!
நன்றி தமிழ்வாசி - பிரகாஷ்.
நன்றி சே.குமார்.
நன்றி ராஜசுந்தரராஜன். மென்பாசி குளம் ஒரு சங்கப்பாடலிருந்து கொணரப்பட்ட படிமமே. பாசி குளம் போன்றது மனம். பாசி குளம் போன்றது சமூகம். :)
மிக்க நன்றி வாசன்.
Post a Comment