Sunday, June 24, 2007

கூடிடு கூடலே

நாச்சியார் திருமொழியின் ஐநூற்றி மூப்பதி நான்காம் பாடலின் ஆரம்பித்து வரும் பத்து பாடல்களில் ஆண்டாள் கூடல் இழைத்து பார்த்து கண்ணன் தன்னை மணப்பான் என்று மணம் தேற்றிக் கொள்வாள். கூடல் இழைப்பதென்பது, கை நிறைய மஞ்சள் கிழங்குகளை அள்ளி எடுத்து அவற்றை இரண்டிரண்டாகச் சேர்த்து இரட்டையாகச் சேர்ந்தே வருகின்றனவா கடைசியில் ஒற்றையாக ஒன்று தனித்து நிற்கிறதா என்றுப் பார்ப்பது தான். இரட்டையாக வந்தால் எண்ணம் கை கூடும்; நினைத்தது நடக்கும் என்று மனம் தேறலாம்.

"திருமாலிருஞ்சோலை வாழ் என் மணாளனார் பள்ளி கொள்ளும் போது அவர் கால்களை நான் வருடிடும் பேறு கிட்டுமா", "வாமனன் வேகமாய் வந்து என் கைப்பற்றி தன்னொடு சேர்த்துக்கொள்வானா", "வசுதேவரின் இளவரசன் வருவானென்றால் ","காளியன் தலை மேல் நடமாடிய கூத்தனார் வருவானென்றால்", "குவலயாபீடம் என்னும் யானையை உதைத்துக் கொன்றவன் என்னைக் கூடுமாகில்", 'கம்சனை வஞ்சனையால் கொன்றவன், மிகப் புகழ் கொண்டு திகழும் வடமதுரைப்பதியின் அரசன் வருவானெனில்", "கன்றுகள் மேய்த்து விளையாடும் கோபாலன் வருவானெனில்", "நிலவுலகத்தையும் அண்டங்களையும் ஒவ்வொரு அடியால் அளந்து தன் உரிமையாய்க் கொண்டவன் வருவானெனில்", ஆய்ச்சியர் சிந்தையில் ஆடும் குழகன் அவன் வருவானெனில்" கூடிடு கூடலே என்று கூறி கூடல் இழைக்கின்றாள் கோதை. அத்தனை முறையும் கூடல் கூடியே வருகின்றது.

இது ஒரு வகை மாய விளையாட்டு. இதை போன்ற பல நிகழ்வுகளை சகுனமாக கொண்டு இருக்கின்றேன் நான் என் வாழ்வில். நான் தினமும் மல்லிகை தொடுக்கும் முன் ரங்கனை வேண்டி சில விசயங்களை நினைத்த படி கூடிடுவாயோ கூடலே என்றபடியே மல்லிகை மலர்களை தொடுப்பது வழக்கம். தோழி சீக்கிரம் வேலை கிடைக்குமா? மல்லிகை தொடுத்து முடிக்கையில் இரட்டைபடையாக வந்திருந்து. இன்னுமொரு நண்பரின் இல்வாழ்கையில் பிணக்கு, அது சரியாக கூடிடு கூடலே என்ற போது கூடல் கூட்டிற்று. இன்னும் பலருக்காக பல விசயங்களை இப்படி நினைத்து கூடல் இழைக்கும் போது பெரும்பாலும் கூடியே வரும்.

அடிக்கடி ரிங்டோன் மாறி கொண்டே இருப்பார். இந்த முறை கூப்பிடும் போது "உனை நான் உனை நான்" பாட்டு இருந்தால், அம்மாவோட சண்டை போட்டு கொண்டு இருக்கும் பக்கத்து வீட்டுகாரன் சரி ஆவான் என்று நினைத்தேன். அவரை கூப்பிட்ட போது "உனை நான் உனை நான் கண்ட முதல்" என்ற பாட்டே ஒலித்ததது. அவரிடம் அம்மாவின் பிரச்சனையை சொன்னேன். வழக்கு பதிந்து அந்த பக்கத்து வீட்டுக்காரர் பண்ணிய அட்டகாசத்திற்கு ஒரு நீதி வாங்கி தந்தார். பணி இடத்தில் மிக அதிக தொல்லை இருந்தது. வேறு வேலையும் கிடைக்கவில்லை, எப்போதும் வெகு அரிதாக வரும் ஒரு பேருந்துக்காக காத்திருந்தேன். அந்த பேருந்து உடனே வந்தால் வேலை கிடைக்கும் என்று நினைத்து முடிக்கும் முன்னமே அந்த பேருந்தும் வந்தது, உடனே வேறு அலுவலகத்தில் வேலையும் கிடைத்தது.

இதை போல் ஆயிரம் விசயங்கள் சகுனங்களை நம்ப அது நடந்திருக்கின்றது. மனம் அவ்வளவு சக்தி வாய்ந்தது. எதை ஒன்றையும் மிக வேண்டினாலோ, மனமாற நினைத்தாலோ அது கண்டிப்பாக நடக்கும். சகுனங்கள் எல்லாமே மனதின் திடமும் சக்தியுமே. அப்படி தான் ஆண்டாள் கூடிடு கூடலே என்று கூறி கூடல் இழைத்தது. அந்த பத்து பாடல்களும் முத்து பாடல்கள்.

மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ


ம‌ல்லிகை இந்த‌ பெய‌ருக்கே அப்ப‌டி என்ன‌ ஒரு ம‌ய‌க்கும் குண‌ம். ம‌ல்லிகை இந்த‌ பெய‌ர் கேட்டாலே ஏன் மல‌ர்ந்த‌ அத‌ன் அழ‌கும், ம‌ன‌ம் அப்பிக்கொள்ளும் ம‌ண‌மும் நினைவுவில் வ‌ருகின்ற‌து. முன்னொரு ப‌திவில் சொல்லி இருந்த‌ப‌டி, என‌க்கு ம‌ல்லிகை என்றால் கொள்ளை பிரிய‌ம். என் வீட்டு தோட்ட‌த்து ம‌ல்லிகையை அழ‌காக‌ நெருங்க‌ தொடுத்து எடுத்து த‌லையில் சூடிக் கொள்வ‌து என் தின‌ப்ப‌டி வேலை. உண‌வு உண்ப‌தை கூட‌ சில‌ வேளை ம‌ற‌ப்ப‌துண்டு ஆயினும் ம‌ல்லிகை தொடுப்ப‌தையோ அதை சூடிக்கொள்வ‌தையோ ம‌ற‌ப்ப‌தில்லை.

அலுவ‌ல் கார‌ண‌மாக‌ நேர‌ம் சென்று வீடு திரும்பினால் கூட‌ இருண்ட‌ இர‌விலும் விள‌க்கொளியின் உத‌வியோடு ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ளை கொய்து எடுத்து மாலையாக்கி கொள்வ‌து என் விடாத‌ ப‌ணி. அதுவும் ஒரு ம‌ல‌ர் கூட‌ செடியில் விடாது கொய்து கொள்வ‌தென் வ‌ழ‌க்க‌ம். க‌ண‌வ‌ர் தின‌ம் கூறுவார் சில‌ ம‌ல‌ர்க‌ளை ம‌ட்டுமாவ‌து விட்டு செல், அல்ல‌து நீ தொடுக்கும் மாலையில் சிறிதேனும் தின‌ம் ர‌ங்க‌னுக்காவ‌து இட்டு செல் என்று. ஆயினும் அவ‌னோ நானோ வேறுவேறு அல்ல‌ர், யாமும் அவ‌னும் ஒன்றே என்றெண்ணி நானே சூடிக்கொள்வ‌து வ‌ழ‌க்கம். இருப்பினும் என் வீட்டு ம‌ல்லிகை செடிக‌ள் ச‌ற்றே குறும்பான‌வை என‌க்கு தெரியாம‌ல் சில‌ ம‌ல‌ர்க‌ளை காலையில் அவ‌ர் கையால் ர‌ங்க‌னுக்கு சூட‌ த‌ன்னோடு ம‌றைத்து வைத்துக் கொள்ளும்.

சரி இப்ப‌டியாக‌ ம‌ல்லிகை என‌க்கு ம‌ட்டுமல்ல‌ ஏனைய‌ர்க்கும் பிடிக்கும். ந‌ம்மாழ்வார் த‌ன்னை நாயகியாக‌(உல‌கில் பெருமாள் ஒருவ‌னே ஆண்ம‌க‌ன் என்ப‌து வைண‌வ‌ர் ஐதீக‌ம்) உருவ‌கித்து கொண்ட‌துமே ம‌ல்லிகைக்கு ம‌ய‌ங்க‌ ஆர‌ம்பிக்கின்றார் பெண் போல‌வே. தென்ற‌ல் த‌ட‌வுகின்ற‌தாம் அவ‌ர் மேனியை அதுவும் ம‌ல்லிகை ம‌ல‌ர்க‌ள் நிறைந்த‌ வ‌ன‌த்தில் இருந்து வ‌ரும் தென்ற‌ல். அட‌டா பாருங்க‌ள் என்ன‌வொரு ர‌ச‌னை இந்த‌ ம‌னித‌ருக்கு. அந்த‌ தென்ற‌ல் த‌ட‌வுத‌ல் இவ‌ர் மேல் தீயிட்டு கொளுத்துவ‌து போல் இருக்கின்ற‌தாம்.

மேலும்

இனிமையான குறிஞ்சி இசை இனிமையானதாக இல்லை, அந்தி சாயும் அழகிய மாலை நேரமும் என்னை மயங்கச் செய்கிறது. செவ்வான மேகங்கள் என் உடலைச் சிதைப்பது போல் உள்ளன. அன்றலர்ந்த தாமரை போன்ற கண்களை உடைய கண்ணபெருமான், ஆயர்குலத்து ஆண்சிங்கத்தை ஒத்த என் மாயவனின் பிரிவுத்துயரால என் மார்புகளும், தோள்களும் விம்ம புகலிடம் தெரியாத பேதையாக தவிக்கின்றேன்.

ஆஹா ஆஹா... என்ன‌ ஒரு காத‌ல் பாருங்க‌ள்.

மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ
வண்குறிஞ் சியிசை தவழு மாலோ
செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ
செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ
அல்லியந் தாமரைக் கண்ணன்
எம்மான்ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ

ந‌ம்மாழ்வார் திருவ‌டிக‌ளே ச‌ர‌ண‌ம்.