Friday, December 16, 2016

உயிரோடையும் காலச்சுவடும் இணைந்து நடத்தும் "சிறுகதை பயிலரங்கம் 2017"

இடம்: சக்தி கல்யாண மண்டபம், அய்யம்பாளையம், திண்டுகல் மாவட்டம்
தேதி: பிப்ரவரி 10,11,12.
நோக்கம்:
தமிழ்ச் சிறுகதையின் வளத்தையும் வலிமையையும் மீண்டும் உணர்தல்; உணர்த்துதல். சம காலப் படைப்புகளை விரிவான வாசிப்புக்கு உட்படுத்துதல். புதிய படைப்பாளிகளைக் கண்ட டைந்து அவர்களை ஊக்குவித்தல்.
நிகழ்வு:
மூன்று நாட்களில் ஐந்து அமர்வுகளாகப் பயிலரங்கம் நடைபெறும். உணவும் தங்குமிட வசதியும் அமைப்பாளர்களால் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் தமது சொந்தச் செலவில் வந்து செல்லவேண்டும்.
பயிலரங்கில் பங்கு பெற:
பயிலரங்கில் பங்கேற்க விரும்புவோர் அவர்கள் எழுதிய சிறுகதை ஒன்றை shortstories.workshop2017@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
நிபந்தனைகள்:
*வயது வரம்பில்லை. அனுமதி இலவசம்
* மாணவ / மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
*ஒருங்கிணைப்பாளர்களால் இறுதி செய்யப்பட்டு பங்கேற்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும்.