Saturday, September 24, 2011

வெயில் பட்ட புல்லென வாடும் தலைவி

வெயிலுக்கு புல் வாடுவதும், பின் மழை பொழிய பொலிவு பெறுவதும் இயற்கையே. மழையை பொழிதலை கவிஞர்கள் காதல் மற்றும் காதல் சார்ந்த உணர்வுகளுக்கு ஒப்பிடுவதும் அதற்கு உண்டான சூழலாக வர்ணிப்பதும் அந்த நாளில் இந்த நாள் வரை தொடர்கின்றது.


பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்! -
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்?


வள்ளி - கொடி
பொற்ப - பொலிய
கானம் - காடு

"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்.

-Chennai library

திருந்திழாய்! என்ன அழகான விளித்தல் இது. இந்த பாடல் பொழிப்புரை இல்லாமலேயே புரிவது மிக வித்தியாசமன்றோ.

ஜே ஜே சில (பின்) குறிப்புகள்

இப்போதுதான் பூத்த மலர்
பறிக்கப்பட்டுவிடும் என்று
சற்றேனும் நினைக்கவில்லை“

"நல்ல சிந்தனை. யார் எழுதினது?"

"நான்தான்"

"அட அம்மிணி சரின்னு சொல்லிட்டாங்களா ?"

"இல்லைங்க.. அந்த வரிகள் வலி வேதனை"

"உனக்காக மலர்ந்த உணர்வுகளை இவ்வளவு சீக்கிரம் எளிதாக வாங்கிக் கொண்டாயே" என்று எனக்கு தோன்றியது.

"நீங்க ஒரு பெண்ணாக பார்க்கறீங்க.. நான் செடியின் வலியை சொன்னேன்"

"உனக்காக மலர்ந்த உணர்வுகளை இவ்வளவு சீக்கிரம் எளிதாக வாங்கிக் கொண்டாயே" என்று
எனக்கு தோன்றியது - இது Hope.

"நீங்க ஒரு பெண்ணாக பார்க்கறீங்க நான் செடியின் வலியை சொன்னேன்." -  இது Reality.

Hope and Reality is not always same.

--X--

நான் சுவீடனில் இருந்த போது வார இறுதியில் ஊர் சுற்றித்தானே ஆறு பயணக்கட்டுரைகள் அளித்திருந்தேன். சுவீடனில் பார்க்க அதிகம் இடமில்லாத காரணத்தால் ஊர் வெளியே கிளம்பும் போது வரைபடத்தில் இங்கி பிங்கி பாக்ங்கி போட்டு பார்த்து ஒரு இடம் செல்வோம். அப்படி போய்  ஒரு நிலையத்தில் இறங்கியதும் அங்கே பார்த்த ஒரு ட்ராமில் "சிக்கில ஹுட்டே" என்று எழுதப்பட்டு இருந்தது.

சிக்கில ஹூட்டே என்ற அந்த பெயர் கவர்ந்திருந்தாலும், அது வரை மெட்ரோவிலும் பஸ்ஸிலுமே அதுவரை பயணம் மேற்கொண்டிருந்தால் ட்ராமில் செல்ல எப்படி இருக்கும் என்று நினைத்து, வேறு ஒரு வார இறுதியில் அந்த ஊருக்கே செல்ல திட்டமிட்டு வரைபடத்தில் தேடி கிளம்பினோம்.

அங்கே சென்றதும்தான் தெரிந்தது அங்கே ஒரு தில்லி தாபா இருப்பது. (எங்கே போனாலும் துரத்தும் தில்லி). மேலும் அருகே ஒரு பெரிய ஷாப்பிங் மாலும், ஒரு பனி மலைப்பிரதேசமும் இருந்தது. (ஸ்கியிங் என்ற மலை மேலிருந்து பனி சறுக்குமிடம்).

தில்லி தாபாவில் சாப்பிட்டோம், அன்னாசி லஸ்ஸி நன்றாக இருந்தது என்பதையும், அந்த ஷாப்பிங் மாலில் எல்லா பொருட்களும் மிக குறைந்த விலையில் இருந்தன என்பதையும், பனி சறுக்குமிடம் வரை வீராவேசமாக சென்று, பின் பயந்து போனாதால், என்னால் என் கூட வந்த யாருமே பனி சறுக்காமல் திரும்பியதுதான் எனது ஸ்வீட் சுவிடன் கட்டுரையிலேயே சொல்லி விட்டேனே.

சரி... ஏன் இந்த மலரும் நினைவுகள் ?

தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்றாக பேசப்படும் சுந்தரராமசாமியின் ஜே, ஜே. சில குறிப்புகள்  புத்தகத்தை கடந்த சில நாட்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

வாசிக்க, வாசிக்க நம்மையும் கதைக்குள் ஈர்த்து, நாமே நாவலின் ஒரு கதாபாத்திரமாக மாறிவிட்டதான உணர்வேற்படுகிறது.

நாவலின் போக்கில் சாதாரணமாக வரும் வாக்கியங்களின் ஆளுமை மிகவும் அதிகம்.

உதாரணத்திற்கு…

"நம் நம்பிக்கைக்கும் உண்மைக்கும் சம்மந்தமே இல்லை என்று சொல்லி உரித்துக்கொண்டே போனால்" (பக்.20)

"பஸ் நிலையம் சென்று அந்த நேரத்தில் நின்ற பஸ்களின் போர்டைக் கவனித்து, விருப்பம் போல் ஏறி - பல சமயம் பெயரிலுள்ள கவித்துவம் காரணமாக - செல்லும் பழக்கம் அப்போது தான் ஆரம்பமாயிற்று என்று நினைக்கிறேன்." (பக்.26)

"ஜேஜே சில குறிப்புகள் ஒரு நாவல் போல் இல்லாமல் ஒரு டைரி குறிப்பு போல இருக்கும் என்றும் அது தான் தமிழில் வந்த முதல் பின்நவீனத்துவ நாவல், போஸ்ட்மார்டனிசம் ஸ்டைல்..." என்றெல்லாம் கூறக்கேட்டு வாசித்துவிட்டு எடுத்த ஓட்டம் தான் மூச்சு வாங்க மேல எழுதி...

அதான் ஜே.ஜே. பின்குறிப்புகள்.


Friday, June 24, 2011

ஒரு வேப்ப‌ ம‌ர‌மும் வ‌ழி ம‌றிக்கும் சாலைக‌ளும்



எங்க‌ள் வீட்டு தோட்ட‌த்தில் மிக‌ப் பெரிய‌ வேப்ப‌ ம‌ர‌மிருக்கிற‌து. சுமார் ஒரு ஏழு வ‌ருட‌த்திற்கு முன் என‌து கை அள‌விற்கே ஒல்லியாக‌ இருந்த‌ இந்த‌ ம‌ர‌ம் த‌ற்ச‌மய‌ம் என்னை விட‌ குண்டு பெண்ணாகி விட்ட‌து. எங்க‌ள் வீட்டு மாடிக்கு மேல் வ‌ள‌ர்ந்து விட்ட‌து இந்த‌ ம‌ர‌ம். வேப்ப‌ம‌ர‌ம் வைத்த‌ கார‌ண‌மே எங்க‌ள் வீடு சாலையிலேயே அமைந்திருப்ப‌தாலும் அதில் தொட‌ர்ந்து க‌ன‌ வாக‌ன‌ங்க‌ள் புழுதியை அள்ளி இறைத்த‌ ப‌டி செல்வ‌தால் வீடு புழுதியாகி விடுவ‌தை சற்றேனும் த‌டுக்க‌லாம் என்ற‌ எண்ண‌மே.

இந்த‌ வேப்ப‌ ம‌ர‌ம் அட‌ர்ந்து வ‌ள‌ர்ந்து க‌ண்ணுக்கு எவ்வ‌ள‌வு குளுமையாக‌ இருக்கிற‌து என்று அருகிருந்து பார்ப்ப‌வ‌ர்க்கு ம‌ட்டுமே தெரியும். இடையிடையே க‌ண்ணாமூச்சி ஆடி சிரிக்கும் சூரிய‌னும் ம‌றைந்து ம‌றைந்து பொழியும் ம‌ழையும் எத்த‌னை அற்புத‌மாக‌ இருக்கும். இந்த‌ ம‌ர‌ம் சில‌ அணில்க‌ளுக்கும், ப‌ல‌ காக‌ங்க‌ள், குயில்க‌ள் ம‌யில்(எங்க‌ வீட்டுக்கே ம‌யில் வ‌ரும் ந‌ம்புங்க‌) இவ‌ற்றின் குதூக‌ல‌த்துக்கும் குர‌லுக்கும் அடித்த‌ள‌மாக‌ அமைந்திருந்த‌து.

வீட்டுக்கு முன் செல்லும் மின்சார‌ க‌ம்பிக‌ளில் வேப்ப‌ங்கிளைக‌ள் மோதுவ‌தாக‌ மின்சார‌ ஊழிய‌ர்க‌ள் வ‌ந்து இர‌ண்டு மூன்று பெரிய‌ கிளைக‌ளை வேப்ப‌ ம‌ண‌ம் ம‌ண‌க்க‌ வெட்டி சாய்த்துவிட்ட‌ன‌ர். ப‌ழைய‌ வேலைக்காரி வேப்ப‌ங்கிளைக‌ளின் மேல் க‌ண் கொண்டிருந்தாள் வெட்டிய‌து தான் தாம‌த‌ம், சில‌ரை அழைத்து வ‌ந்து வெட்ட‌ப்ப‌ட்ட‌ அத்த‌னை கிளைக‌ளையும் அள்ளிக் கொண்டு போய்விட்டாள். த‌ற்ச‌ம‌ய‌ம் வீட்டை விட்டு வெளியே வ‌ந்தால் சூரிய‌னும் ம‌ழையும் நேர‌டியாக‌ தெரிகின்ற‌ன‌.

"கூரை எரிந்து போன‌து
நில‌வு தெளிவாக‌ தெரிகின்ற‌து"

என்றொரு ஹைக்கூ க‌விதை இருப்ப‌தாக‌ கற்றதும் பெற்றதுமில் சுஜாதா எழுதியதைப் ப‌டித்திருக்கிறேன்.



வீட்டுக்கு அருகில் இருக்கும் சில‌ தெருக்க‌ளில் ம‌க்க‌ள் தா‌ங்க‌ளே அமைத்துக் கொள்ளும் வேக‌த் த‌டைக‌ளை க‌ட‌க்கும் போது என்ன‌வ‌ர் சொல்வார் "இது எல்லாம் தேசிய‌ செல‌வீன‌ம்(நேச‌ன‌ல் வேஸ்டேஜ்)". அவ‌ர் அப்ப‌டி சொல்ல‌ கார‌ண‌ம் இந்திய‌ அர‌சு அதிக‌ விலைக்கு பெட்ரோலிய‌ க‌ச்சா பொருள் வாங்கி செல‌வு செய்து பெட்ரோல் செய்து மிக‌ குறைந்த‌ விலைக்கு விற்கிற‌து. எண்ணை நிறுவ‌ன‌ங்க‌ள் பெரும்பாலும் அர‌சின் ந‌ட்ட‌ க‌ண‌க்கு பாக‌த்திலேயே வ‌ருகின்ற‌ன‌. அப்ப‌டி இருக்க‌ ப‌த்த‌டிக்கு ஒரு வேக‌த்த‌டை வாக‌ன‌த்தின் பெட்ரோல் செல‌வினை அதிக‌ரிக்கும். அதுவும் தெருக்க‌ளில் போட‌ப்ப‌டிருக்கும் வேக‌த்த‌டை விதிப்ப‌டி சீராக‌ கொஞ்ச‌ம் தொலைவிலிருந்து ஏறி இற‌ங்கி இருக்காது. கொக்கு மாக்காக‌ சுவ‌ர் போல் எழுப்பி இருப்பார்க‌ள் ஏறித் தான் குதிக்க‌ வேண்டும். என்ன‌வ‌ர் எண்ணை நிறுவ‌ன‌ர் ஆயிற்றே இத‌ற்காக‌ அலுத்துக்கொள்வார்.

சென்ற‌ வார‌ம் நேர்முக‌ தேர்வொன்றுக்காக‌ டெல்லி வ‌ரை செல்ல‌ வேண்டி இருந்த‌து. இந்திய‌ சாலைக‌ளில் முக்கால்வாசி குண்டும் குழியுமாக‌ வ‌ழி வார்ப்பதை விட்டு வ‌ழி ம‌றிப்ப‌தையே வேலையாக‌ கொண்டிருப்ப‌வை. அதுவும் டெல்லியின் தொட‌ர்ம‌ழை கார‌ண‌மாக‌ குண்டும் குழியும் மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌ன விழுந்து எழுந்து சென்று கொண்டிருந்தோம்‌. தெருவில் வேக‌த்த‌டைக்கே "நேச‌ன‌ல் வேஸ்டேஜ் என்பீர்க‌ளே இதை என்ன‌ சொல்வ‌து" என்றேன். இது "கொலைக்குற்ற‌த்திற்கு இணையான‌து" என்றார். ஆம் அவ‌ர் சொல்வ‌து ச‌ரி தான் அந்த‌ சாலையில் ஒரு நாளைக்கு எத்த‌னை வாக‌ன‌ங்க‌ள் க‌ட‌க்கின்ற‌ன‌? இத்தனை குண்டும் குழியுமாக‌ எத்த‌னை சாலைக‌ள் இருக்கின்ற‌ன‌? மொத்த‌ பெட்ரோலிய‌ க‌ச்சா எண்ணை இருப்பு என்ன‌? ம்ம் நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் கொஞ்சமேனும் யோசிப்பார்க‌ளா அல்ல‌து காம‌ன் வெல்த் ம‌ட்டும் சேர்த்துக் கொண்டு இருப்பார்க‌ளா? அந்நிய‌ன் விக்ர‌ம் போல் யாராவ‌து வ‌ந்தால் தான் என் தாய்த்திரு நாட்டை காக்க‌ முடியும். ஹூம்ம்ம்ம்.