Friday, September 24, 2010

காத‌ல் வ‌ந்தால்

காதல் வந்தால் பதினெட்டு/இருப‌து வருடம் வளர்ந்த பெற்றோர் மறந்து, சுற்றம் சுழல் மறந்து, தோழியர் மறந்து, தோட்டத்து மல்லிகைகளை, அக்கம் பக்கத்து சிறுவர் சிறுமியரோடு கழித்த காலங்கள் மறந்து போவது எந்த காலத்திலும் மட்டும் அல்ல அக்காலமே இருந்து இருக்கின்றது.

என் தோழி ஒருத்தி சொன்னாள் சினிமாவில் காத‌ல் எளிது, பெற்றோர்க‌ளை வில்ல‌த்த‌ன‌மாக‌ காட்டி விடுக்கின்றார்க‌ள். ஆனால் நிஜவாழ்க்கையில் அது அப்ப‌டி இல்லை. என்ன‌ ப‌ண்ற‌துன்னே தெரியாது என்றாள். அப்ப‌டி பாச‌த்தை கொட்டும் தாயோருத்தியின் ம‌ன‌நிலையில் எழுதுப்ப‌ட்ட‌ இந்த‌ பாட‌ல்...

பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும்,
ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,
காய்ந்து கதிர் தெறூஉம் காடு?


ஆயம் - தோழியர் கூட்டம்

"பாலோடு ஒப்பிட்ட வல்ல ஆய்ந்த மொழிகளையுடைய என் மகள், காய்தெரிக்கும் சூரிய கதிர்களால் வெப்பம் மிகுந்த பாலைக் காட்டில், தன்னுடைய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாய் கொண்ட பைங்கிளிகள், தோழியர் கூட்டம் ஆகியவை ஒன்றையேனும் நினைக்காமல், காதலன் பின் செல்வாளோ என்ன?"

No comments: