Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Tuesday, September 24, 2013

வெற்றியைத் தேடி ஓடும் முட்டாள்கள்


3idiats4
பொதுவாக நான் ஹிந்தி படம் பார்ப்பதில்லை. ஒரு படம் வெற்றி பெற்றால் அதைப் போலவே பல படங்கள் வருவதும் அதுவும் ஒரே மாதிரியான மசாலா என்று, ஹிந்தி படத்திற்கென்று சில பார்முலாக்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட சில  தந்திரங்களும் அதனுடன் சில நல்ல தகவலும் (மேசேஜ்) அளித்துள்ளது இந்த திரி இடியட்ஸ் படம். படத்தின் தலைப்பே படம் பார்க்க தூண்டுகின்றது. புத்தாண்டு அன்று டில்லியில் வைகுண்டநாதரையும் காமாட்சியையும் சேவித்து விட்டு வரலாமென்று கடந்த வெள்ளி சாயுங்காலம் சென்று திரும்பும் போது இந்த படத்தில் தலைப்பை பார்த்துவிட்டு வழக்கமான இந்த மசாலா படமாகவே இருக்கும் என்று நினைத்தேன். அதன்பின் பலரும் இந்த படத்தை பற்றி ஓஹோ என்று சொல்ல நேற்று அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் அவசரமாக உப்புமாவை கிண்டி, உண்டு 7.30 காட்சிக்கு சென்றோம்.
3idats
எஸ் ஆர் எஸ் என்ற மாலில் இருக்கும் திரையரங்கில் 10 நிமிட தாமதத்தில் அடைந்து படம் பார்க்க ஆரம்பித்தோம். முட்டாள்  தான் கதை சொல்லி. (நம் மேடி மாதவன்) அவன் தன் நண்பன் முட்டாள் - 2  இடம் தங்களின் மற்றொரு மிக நெருங்கிய நண்பனை பற்றிய தகவல் தெரிந்து விட்டதாக சொல்ல அவனும் பேண்ட் கூட போட மறந்து அவசர அவசரமாக தங்கள் படித்த கல்லூரிக்கு செல்கின்றான். அங்கே இன்னுமொருவன் (நல்லவேளை இவன் முட்டாளில்லை) அவர்களிடம் சம்பந்தமே இல்லாமல் இன்று நாள் நினைவிருக்கிறதா 10 வருடத்துக்கு முன்... என்று கதை ஆரம்பித்த உடன் நினைத்தேன், ஆஹா நல்லா மாட்டிகிட்டோம் என்று, ஆனால் அங்கிருந்து முட்டாள் - 3 தேடி சிம்லா புறப்பட்டதும்தான் தெரிந்தது படம் முடிந்த பின் தான் படம் முடிந்து விட்டது என்று நினைப்பே வந்தது அப்படி ஒரு தொய்வில்லாத கதையோட்டம், நல்ல திரைக்கதை அமைப்பு. கொஞ்சம் பிளாஷ் பேக் கொஞ்சம் நிகழ்காலம் என்று அழகாக கதையை நகர்த்தி இருக்கின்றார்கள்.
3idiats2
நிறைய நல்ல விசயங்களை சொல்லி இருக்கின்றார்கள் இந்த படத்தின் மூலம் நம் வெற்றி என்னும் தொடர் ஓட்டத்தில் ஓடிய படியே வாழ்க்கையை தொலைப்பதை விட பிடித்த விசயம் செய்தால் வெற்றி நம் பின் ஓடி வருமென்றும், படிப்பு என்று புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்து வெள்ளை காகிதத்தில் வாந்தி எடுப்பது போலில்லாமல் கொஞ்சம் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படும்படி இருக்க வேண்டும். படிப்பு மன அழுத்தத்தை உருவாக்க கூடாது, பெற்றோர் தங்கள் பெருமைக்காக தமக்கு பிடித்த படிப்பை பிள்ளைகள் மேல் திணிக்க கூடாது. ராகிங் இருக்க கூடாது. இனொவேட்டிவ் படிப்பியல் படிப்பு எதையாவது புது விசயங்களை கண்டறியவோ புது கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். மில்லியன் டாலரில் வீடு  அமெரிக்காவில் மிகப் பெரிய நிறுவனத்தின் வேலை இது தான் வெற்றியின் அளவல்ல. பிடித்த விசயத்தில் மனமென்றி குறைவாக சம்பாத்தித்து நிறைவாக வாழ்ந்தாலும் வெற்றியே இப்படி நல்ல பல விசயங்களை முன் வைத்துள்ளது.
idiat2
இவ்வளவு நல்ல விசயங்கள் இருந்தாலும் சில விசயங்கள் கொஞ்சம் மிகையாகவே காட்டப் பட்டிருக்கின்றன, நல்ல கல்வி நிறுவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதன் நிறுவனர் மிகவும் கடினமானவர் இறக்கமற்றவர் படிக்கும் மாணவர் தற்கொலை புரிந்து கொள்ளமளவு மன அழுத்தம் தர கூடியவர், புத்தகத்தில் இருப்பதை மட்டுமே ஒப்பிக்க கூடிய மாணவர்களே ஆசிரியர்களை கவரும் வண்ணமிருக்கின்றனர் இப்படிப்பட்ட விசயங்களும் சில சினிமாத்தனமான இயல்பற்ற காட்சிகளும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த படத்தை மனமாற பாராட்டலாம். எது எப்படி இருந்தாலும் திரைக்கதை மற்றும் கச்சிதமான பாத்திர வடிவமைப்பிற்காக நிச்சயம் ஒரு முறை பார்க்க வேண்டிய திரைப்படமே இந்த மூன்று முட்டாள்கள்.
- லாவண்யா சுந்தரராஜன்

Friday, September 24, 2010

மதராச பட்டினம் – தயிர் விட்ட பழையதும் மாவடுவும்




படத்தின் டைட்டில் கார்ட் பழைய மதராச பட்டினத்தின் வரைபடத்தின் சில ஊர்களில் எழுதப்பட்டு நேர்த்தியான பிண்ணனி இசையோடு காட்டுகின்ற கணத்திலேயே மிக நல்ல படம் என்ற உணர்வுக்கு இழுத்து சென்றது.

படம் ஒரு இரங்கல் கூட்டத்தோடு (“a wonderful husband” என்கிறார் பாதிரியார் அது எப்படி அய்யா உனக்கு தெரியுமென்று கேட்க தோன்றுகிறது) ஆரம்பித்து பின்னர் எமியின் கண்ணோட்டத்தில் தொடர்கிறது. அவருக்கு தன் உயிருக்கு ஆபத்தென்று தெரிந்ததும் தன்னிடம் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணின் தாலியை இது என்னுடையது அல்ல இதை உரியவரிடம் சேர்க்க வேண்டுமென்று இந்தியா செல்ல வேண்டுமென்று தன்னுடைய மகளையும் இந்தியன் எம்பசியை இதெல்லாம் இருந்தாதான் இந்தியா போகனுமா என்று தமிழ் வாக்கியத்தாலும் கன்வின்ஸ் செய்து (ஒரு தமிழ் வாக்கியத்திற்கு இந்தியாவுக்கு வர விசா கிடைத்து விடுமா?) தனது தேடுதலை தொடங்கி இந்தியா வருகிறார் எமி.

எமி இந்தியா வந்ததும் தன்னுடைய சக்கர நாற்காலியில் வரும் போதே அந்த காலத்தில் தன்னை வரவேற்ற நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த வண்ணம் வருகிறார். சென்னையில் டாக்ஸிகாரர் உரிமையோடு அழைக்கும் விதத்திலிருந்து வெளிநாட்டுக்காரர்கள் என்றாலே அவர்களிடம் ஏமாற்றி பணம் பறிக்கலாம் என்ற திட்டதோடு இருக்கும் சென்னைவாசிகள் சிலரையும் கனகச்சிதமாக பொருத்தி இருக்கின்றார்கள். எந்த பாத்திர அமைப்பு இது தேவையற்ற இடைச்சொருகலாக இருக்கின்றதே என்று நினைக்கும்படியில்லை. எல்லா கதாபாத்திரங்களும் ஏதாவது ஒரு விதத்தில் திரைக்கதையோட்டத்திற்கு உதவி இருக்கின்றார்கள்.

எமி தற்கால சென்னையின் மாற்றங்களை நோட்டமிட்டபடி தொடங்கும் பரிதியை தேட தொடங்கும் பயணத்தில் அவரின் பழைய நினைவுகளையும் தற்கால தேடல்களையும் சரிவிகிதமாக சேர்ந்து கொஞ்சம் கூட தொய்வு குறையாத திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம். ஒவ்வொரு இடமாக தேடி ஏமாற்றம் அடையும் எமி கடைசியாக மருத்துவமனையில் காதரை அடையாளம் காணும் போது அப்படா என்ற நிம்மதி நமக்கே பிறக்கிறது. பின்னர் அவரும் இறந்து போனதும் எமியின் தவிப்பு நமக்கும் தொத்திக் கொள்வது அற்புதமான கதையமைப்பு. என்ன தான் ஏமாற்றியும் கறாராகவும் காசு கரந்தாலும் தமிழர்கள் இரக்கமுள்ளவர்கள் என்றும் ஈரமான எந்த உணர்வுக்கும் எந்த தமிழனும் உதவுவான் என்றும் பின்னர் நடக்கும் தேடலில் காட்டி இருப்பது சற்றே ஆறுதலான விசயம்.

இந்த திரைப்படத்தில் நிறைய விசயங்கள் கவித்துவத்துடன் சொல்லப்பட்டிருக்கின்றது. எல்லோரும் நல்லவர்கள் போல் காட்டப்பட்டிருக்கின்றனர். அந்த காலத்தில் மழை கூட தோழமையோடு காட்டப்பட்டிருக்கின்றது. ஏதாவது சண்டை என்றால் கூட “வெயில் இருக்கும் போதே வேலை முடிப்போம் வாங்க” என்ற சமாதானம் போதுமானதாக இருந்திருக்கிறது. விமான சத்தம் குண்டு போடறாங்க ஓடி ஒளிஞ்சிக்கங்கன்னு ஒருவன் சொல்ல அனைவரும் ஓடி மறையும் வெள்ளெந்தியாக இருக்க முடிகிறது, Floating point வாய்ப்பாடு போகிற போக்கில் சொல்லி தர முடிகிறது, ஒரு மல்யுத்தத்தில் ஜெயித்தால் அரசால் ஆக்கிரமிக்க பட இருக்கும் நிலம் மீண்டும் உரியவர்க்கு கைவசமாகும் சாத்தியமிருக்கிறது. (வெள்ளையர்கள் நம் அரசியல்வாதிகளினும் நல்லவர்கள் என்றே நினைக்க தோன்றுகின்றது)

படத்தில் நகைச்சுவை திணிக்கமல் போகிற போக்கில் சொல்லி இருக்கின்றார்கள். அத்திரிபாட்சா கொழுக்கட்டை கதை கணக்கா எமிக்கு நன்றி சொல்ல பரிதியும் அவன் நண்பர்களும் தான்கூ தான்கூ என்று சொல்லிக்கொண்டே வந்து சைக்கிள் பள்ளத்தில் விழுந்தெழுந்ததும் மங்கு மங்கு என்று சொல்லிக் கொண்டே வருவதும் பின்னர் எமியே தாங்யூ பிரேவ் மேன் என்று சொன்னதும் அதான் அதே தான் தாங்யூ என்று சொல்லி முடிப்பது அழகான நகைச்சுவை. கோல்ப் விளையாட்டை கோலி குண்டு விளையாட்டா என்று என்று கேட்கும் மொழிபெயர்பாளாராக வரும் நம்பி அதையே குச்சி வைச்சி தள்ளிவிட்டு விளையாடுவது என்பதும், ஆங்கில எழுத்துகளை தமிழ் எழுத்து போல சொல்லி தர சொல்லி எ, ஏ, பி, பீ, சி, சீ என்று படிப்பது மாசற்ற நகைச்சுவை.

பிண்ணனி இசை குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய ஒன்று, கொஞ்சம் இந்தி பட சாயல்களில் வரும் பிண்ணனி இசையானாலும் இசையும் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. அதுவும் எமியுடன் பரிதி கற்றுக் கொண்டு வந்து பேசும் நான்கு வாக்கியங்களுக்கு தடுமாறும் போது மறந்துட்டியா என்று எமி முதல் முறையாக தமிழ் பேசும் போதும் அரும்பும் காதலுக்கு பிண்ணனியாக வந்த இசைத்துளிகள் ரம்மியமாக ரசிக்கும்படி இருக்கின்றது. வெள்ளைக்காரி என்பதால் கொஞ்சம் படித்த அறிவாளி மற்றும் கவர்னர் மகள் என்பதால் எளிதாக தானே கற்றுக் கொள்ள ஏதுவான தமிழ் புத்தகங்களை வாங்கி பயில்கிறாள். உங்களிடம் கொடுக்க இந்த தாலி இருக்கே என்று தன் காதலையும் தயக்கமின்றி அவளே தான் சொல்கிறாள்.

அந்த கால கேமிரா, டிராம், கூவம் நதி, பங்கம் கால்வாய், வால்டாக்ஸ் ரோட் மணிக்கூட்டு அந்த கால கார், ரயில் கைவண்டிகள் கட்டங்கள் என்று மொத்தத்தையும் பழைய மதராஸ் பட்டினமென்று காட்ட மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கலை இயக்குனரை இதற்காக பாராட்டாமல் இருக்கவே முடியாது. உண்மையாகவே சிங்கார சென்னை என்பது பழைய மெட்ராஸ் தான் என்று ஒவ்வொருவரும் உணரும் வண்ணம் செய்து இருக்கின்றார்கள்.

படத்தில் சில விசயங்கள் நெருடாமல் இல்லை. கதை களம் நடந்த வருடம் 1945 முதல் 1947 வரை அந்த காலகட்டத்தின் சுதந்திர போராட்டம் பற்றி தொடும் தொடாத வண்ணம் காட்டி இருப்பது சுதந்திரத்திற்காக இவ்வளவு தான் போராடினார்களா என்று நினைக்க ஏதுவாக இருக்கின்றது. அதே போல் ஆர்யா வெள்ளையர்களை எதிர்ப்பது போல அதற்காக அடிக்க வரும் போது எமி அந்த இடத்தில் இருப்பதை கண்டு விட்டுவிட்டு போவதும் பின்னர் யாரை அடிக்க நினைத்தானோ அவனை அடிக்காமல் இருப்பதும் எதோ விடுப்பட்டது போல இருக்கின்றது. அதே போல ஒரு பத்து இருபது பேர் சென்று ஒரு பிரஸ் மிட் போன்ற இடத்தில் எப்போது சுதந்திரம் தேதியை இப்போதே சொல்லுங்கள் என்று கேட்டதும் கவர்னர் ஜென்ரல் சொல்வது போல காட்டி இருப்பதும் கொஞ்சம் அபத்தமாக இருக்கின்றது. லண்டனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வந்த இடத்தில் யார் சம்மதமுமின்றி ஒருத்தியை மணந்து அதே கலாச்சாரத்தை பின்பற்றும் கவர்னரான எமியின் தந்தை இந்திய மனப்பான்மையுடன் உன்னை கொன்றாலும் ஒரு இந்தியனுக்கு மனம் செய்து தர மாட்டேன் என்று சொல்வது ஏற்புடையதாக தோன்றவில்லை. படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்வது போல இருக்கின்றது அதற்கு இதன் நீளம் காரணமாக இருக்கலாம். மேலும் இடைவெளி முடிந்து வரும் பாடல் ஒன்று மட்டும் கொஞ்சம் இடைச் சொருகல் போல இருக்கின்றது. ஆனால் அவ்வளவு எழிலான மதராச பட்டினம் காட்டிய காரணத்திற்காக இந்த குறை அனைத்தையுமே மறந்து விடலாம்.

படத்தில் குறியீட்டு கவிதை போல பல காட்சிகள் இருக்கின்றன. கோல்ப் மைதானத்திற்காக இடத்தை பிடுங்க வரும் அதிகாரிகளிடம் பேசும் போதும் சரி அதற்காக மனு எழுதும் போதும் மற்ற எந்த விசயங்கள் பேசும் போதும் தூங்கி கொண்டே இருந்த ஒரு கதாபத்திரம் தன் இடத்தை மீட்க பரிதி மல்யுத்தம் புரியும் போது மட்டும் விழுத்து எழுந்து ஆரவாரம் செய்வது, நம் பொதுஜனத்தை குறியுட்டு சொல்லப்பட்ட கதாபத்திரம், அதே போல் நாட்டின் சுந்திரத்திற்கான பேச்சு வார்த்தை நடக்கும் அதே சமயம் எமி தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் காட்சிகளை மாறி மாறி காட்டி இருப்பதும் ஒரு அழகியல் கவிதை. இந்தியா சுதந்திரம் பெற்ற அதே நாள் கொண்டாங்கள் யாவும் எமியும் பரிதியும் காதலை கொண்டாட நடத்தப்படுவது போன்றே காட்டப்பட்டிருந்தது. சரியாக சுந்திர விடியலில் வெள்ளைக்கார ஐஜியாக வருபவனை கொன்று அவனிடமிருந்து தப்பிப்பதும் ஒரு குறியீட்டு கவிதை போன்றே இருக்கின்றது.

படத்தின் ஆரம்ப இடைப்பட்ட சில காட்சிகள், இசை டைட்டானிக், லாகான் மற்றும் 1942 ஏ லவ் ஸ்டோரி போன்ற படங்களை நினைவுக்கு கொண்டு வந்தாலும் மதராஸ பட்டினம் திரைப்படம் பார்த்துவிட்ட வந்த பொழுதில்
சிங்கார சென்னை உண்மையாகவே சிங்காரமாக இருந்த தினங்களில் வாழ்ந்து விட்ட மனம் நிறைந்த உணர்வு இருந்தது. இதை அப்பட்ட காப்பியடித்தல் என்று சொல்ல வேண்டியது இல்லை. நல்ல படத்திலிருந்து சில நல்ல விசயங்களை எடுத்து நம் காட்சிகளத்திற்கு பயன்படுத்தி கவிதை போன்ற இந்த படத்தை தந்தால் அது மிகவும் வரவேற்க்கபட வேண்டிய விசயமே.

படத்தின் இறுதிகாட்சி முற்றிலும் இருட்டாக ஆக்கப்பட்டு சில வசனங்களில் முடித்திருந்தனர். அப்படி முடிந்த பின் வரும் புகைப்படங்களில் மதராஸ பட்டினத்தின் அழகும் இவை இப்போது மாற்றப்பட்டிருக்கும் விதமும் காட்டி இருப்பது கூட ஒரு அழகியல் செயலாக இருக்கின்றது. படம் முடிந்து விட்டது என்று தெரிந்தாலும் எழுந்து நடந்த எல்லோரும் நின்ற வண்ணமே அத்தனை புகைப்படங்களையும் ரசித்து விட்டு பின்னரே சொல்கின்றார்கள். சென்னையின் அடையாளமாக எத்தனை விசயங்கள் அவற்றில் சென்ரல் மணிக்கூண்டை தவிர எல்லாவற்றையும் இழந்திருக்கிருறோம்.



எமி கூவம் நதிக்கரையை பார்த்து, அதன் பழைய அழகை உணர்ந்தும் பின் தற்சமயம் சிறுவர் தங்கள் காலைக்கடனை அங்கே முடிந்து கொண்டிருப்பதை கண்டு முகம் சுளிப்பார். அந்த சமயம் நிச்சயமாக நம் நெஞ்சை ஏதோ செய்வது போல இருப்பது மிகவும் உண்மை. இன்று கொசுக்களில் உற்பத்தி பண்ணையாக இருக்கும் பங்கிம் கால்வாய் அந்த காலத்தில் அத்தனை எழிலோடு இருந்ததா? 1942களில் அத்தனை எழிலோடு திகழ்ந்த சென்னை மாபட்டினம் இத்தனை எழில் குறைந்து போக நாடாள்வோரை தவிர வேறு யாரும் காரணமாக இருக்க முடியாது. மக்களில் வாழ்வாதாரத்திற்கு சென்னை தவிர வேறு இடமே இல்லை என்று மொத்த தமிழ்நாட்டின் முக்கால் பாகம் சென்னையில் இருந்தால் சிங்காரம் எங்கிருக்கும்? கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் சிலர் தங்கள் கொள்ளையடித்ததில் கொஞ்சத்தை செலவளித்தாலே சென்னை சிங்காரம் பெறும். யோசிப்பார்களா? மதராஸ பட்டினம் படம் இந்த கேள்வியை என் மனதில் வைத்தது. சென்னை நேசிக்கும் இன்னும் பல கோடி மக்களிடம் இதே எண்ணத்தையே விதைக்கும்.

Tuesday, June 22, 2010

ராவ‌ண‌ன் : ந‌வீன‌ கோப்பையில் புராண‌ கஞ்சி


புராண‌ங்க‌ளில் என்னைக் க‌வ‌ர்ந்த‌ இரண்டு பாத்திர‌ங்க‌ள் ராவ‌ண‌ன் ம‌ற்றும் க‌ர்ண‌ன். பிற‌ன்ம‌னை நோக்காத‌வ‌ன் ம‌ட்டும‌ல்ல‌ பிற‌ பெண்டிர் த‌ம்மிட‌த்தே இருப்பினும் அவ‌ர்த‌ம் ச‌ம்ம‌த‌மின்றி விர‌ல் கூட‌ ப‌டாம‌ல் வைத்திருத்த‌ல்தாம் உண்மையான‌ பேராண்மை என்ப‌து. ராவ‌ண‌னை ப‌த்து த‌லை கொண்ட‌வ‌ன் என்ற‌ ஒரே கார‌ண‌த்திற்காக‌ அர‌க்க‌ன் என்ப‌து என‌க்கும் எப்போதும் ஏற்புடைய‌து அல்ல‌. சீதையை அவ‌ன் க‌ட‌த்திய‌தும் கூட‌ த‌ன் த‌ங்கையை அர‌க்கி என்ற‌ கார‌ண‌த்தால் ஒரு தெய்வ‌ நிலைக்கு அருகில் இருந்த‌ ஒருவ‌ன் இய‌ற்கையான‌ அவ‌ள் விளைவை அழ‌காக‌ ம‌றுக்காம‌ல் அவ‌ள் மூக்கினை அறுத்த‌ ஒரே கார‌ண‌த்திற்கே என்றே தோன்றும். சீதை மேல் காத‌ல் என்ப‌து ர‌ச‌ம் சேர்க்க‌ பின்ன‌ர் புனைய‌ப்ப‌ட்ட‌தாக‌ இருக்க‌க் கூடும்.

வெகு நாட்க‌ளாக‌ ஆவலோடு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வெளிவ‌ந்த‌ ‘ராவ‌ண‌ன்‘ ராமாய‌ண‌த்தை ஒட்டி எடுக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌து எல்லா தரப்பினராலும் வெளிப்படையாக பேசப்பட்டதுதான்.ஆயினும் இந்த‌ அட்டை காப்பியை சொதப்பி எடுப்பார் என்பது ம‌ணிர‌த்தின‌த்திட‌ம் இருந்து நாம் எதிர்பார்க்காத‌து. என்னதான் நவீன கோப்பையில் வ‌ழ‌ங்கி இருந்தாலும் சீதையின் மேல் ராவ‌ண‌ன் சுண்டு விர‌ல் கூட‌ ப‌ட‌வில்லை ப‌ட‌த்தில் (‘U‘ சான்றிதழ் ப‌ட‌ம் பார்க்க‌ற‌துன்னா சும்மாவா?) கொஞ்ச‌ம் நெருட‌ல்க‌ளில் ஒன்று சூர்ப்ப‌னகையை மூக்க‌றுக்க‌த‌ற்கு ப‌தில் கூட்டு சேர்ந்து க‌ற்ப‌ழித்திருக்கின்றார்க‌ள்.


‘ஏன் ம‌ணி சார், ஒரு பெண்ணை விசாரிக்க‌ கூட்டுட்டு போனா, அவ‌ங்க‌ளை காவ‌ல்நிலைய‌த்தில் இர‌வு தங்க வைக்க‌ கூடாது, அப்ப‌டியே இருந்தாலும் பெண் காவலர் கூட‌வே இருக்க‌ வேண்டும் என்ப‌து கூடவா உங்க‌ளுக்கு தெரியாது?‘

அதென்ன‌ காவ‌ல்துறையை சார்ந்த‌வ‌ர்க‌ள் எல்லோருமே ஈவு இர‌க்க‌ம‌ற்ற‌வ‌ர்க‌ளா...
சமாதான‌ம் பேச‌ வ‌ந்த‌வ‌ரைக்கூட‌ சுட்டுக் கொல்வாங்களா என்ன‌? த‌ன்னுடைய‌ காத‌ல் ம‌னைவியானாலும் எதிரியை கொல்ல இல்லாத‌தும் பொல்லாத‌தும் சொல்வாங்க‌ளா என்ன‌? என்ன‌வோ போங்க‌...

சுஹாசினி வ‌ச‌னம் ப‌ல‌ இட‌த்தில் ந‌ன்றாக‌ இருந்த‌து.

"ஏழு பொருத்த‌ம் பார்த்தாங்க‌ கைக்கால் வழ‌வ‌ழ‌ப்பா இருக்கான்னு பாத்தாங்க‌ளா?"

"என்னை கோப‌த்தோடே வைத்திரு இவ‌ங்க‌ பிரிய‌ம் என்னை ப‌ல‌வீன‌ப‌டுத்தாமா பார்த்துக்கோ"

இது போல‌ இன்னும் ப‌ல‌ இட‌ம். ஆனா சுஹாசினி "பொம்ப‌ளை பின்னால‌ ஒளிஞ்சி த‌ப்பிச்சிட்டானா" என்ற வசனடம் கேவலமாக இருந்தது. மிக‌வும் வ‌ருத்த‌ப‌ட‌வைத்த‌ வ‌ச‌ன‌மிது. ப‌ல‌ இட‌த்தின் நீண்ட‌ வ‌ச‌ன‌ம்... இதுவ‌ரை ம‌ணிரத்னம் ப‌ட‌த்தில் இதுவ‌ரை இல்லாத‌து. சில‌ இட‌த்தில் கொஞ்ச‌ம் ச‌லிப்பா கூட‌ இருந்த‌து. அடுத்த‌ ப‌ட‌த்தில் க‌வ‌ன‌ம் செலுத்துவீங்க‌ன்னு நினைக்கிறேன். உங்க‌ள் ப‌ட‌ப‌ட‌ பேச்சை ஹாசினி பேசும் ப‌ட‌த்தில் ர‌சிப்ப‌தை போல‌ இங்கே “ப‌க்..ப‌க்.. டாண்டன‌... டாண்ட‌ன‌... இந்த‌ வச‌ன‌ங்க‌ளை ர‌சிக்க‌ முடிய‌வில்லை. படத்திற்கு கதை என்று யார் பெயரையும் போடாமல் விட்டு விட்டது ஒரு ஆறுதலான விஷயம்.

ரொம்ப‌வே ஒட்டாம‌ல் இருந்த‌ விட‌ய‌ம் தேவ் (வாசுதேவ்??) க‌தாப‌த்திர‌மாக‌ வ‌ந்த‌ பிருத்விராஜ். மீசையில்லாம‌ல் கிட்ட‌த்த‌ட்ட‌ அர‌வாணி போல் தோன்ற‌ம‌ளிக்கிறார். உய‌ர் காவ‌ல் அதிகாரியாக‌ மென‌க்கெடும் மிடுக்கும் கொஞ்ச‌ம் கூட‌ பொருந்த‌வில்லை. அது ச‌ரி... ப்ரியாம‌ணியின் க‌ண‌வ‌னாக‌ வ‌ருப‌வ‌னிட‌மும் ஏன் அந்த‌ அள‌வு கொடூர‌மாக‌ ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும். அவ‌ருக்கு தெரியாத‌ அவ‌னுக்கு அந்த‌ கூட்ட‌த்திற்கும் எந்த‌ ச‌ம்ம‌ந்த‌மும் இல்லை என்று. ச‌ர்க்க‌ரையை ஏன் கொல்ல‌ணும்? வெண்ணிலாவுக்கு ந‌ட‌ந்த‌ விச‌ய‌ம் தேவ் அவ‌ர்க‌ள் கவனத்திற்கு வ‌ராம‌லா இருந்திருக்கும். பின் அதுக்கு ஏன் எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌லை. ப‌ட‌த்தில் கேட்க‌ப்ப‌டும் “உங்க‌ பொண்ணு என்றால் ம‌ர‌க‌த‌ம்... எங்க‌ பொண்ணுன்னா“ என்ற‌ கேள்வி என‌க்கு கேட்க‌ தோன்றிய‌து. இதுபோல படத்தில் நிறைய கேள்விகள் எழுகின்றது. கொஞ்சமும் லாஜிக் இல்லாத கதையமைப்பு, காட்சிகள் சலிப்பூட்டுகின்றன.
சில‌ காட்சிக‌ளை வ‌ச‌ன‌மின்றி சொல்லி இருக்க‌லாம். உதார‌ண‌த்துக்கு, வெண்ணிலா த‌ன் அண்ணிட‌ம் த‌ன‌க்கு ந‌ட‌ந்த‌தை சொல்கிற இடம். ஆனா சில‌ காட்சிக‌ளை காட்சிப‌டுத்தி இருந்த‌ வித‌ம் அழ‌கா இருந்த‌து. நிறைய‌ இய‌ற்கை எழில், ம‌ழை அந்த‌ பெரிய‌ விஷ்ணு சிலை இருக்குமிட‌த்தில் வ‌ரும் க‌விதை போன்ற‌ காட்சி இப்ப‌டி ப‌ல‌.

ஆனால் க‌டைசிவ‌ரை ராவ‌ண‌ன் த‌ன் ஆசையை சொல்லி கிட்டே இருக்கான், ராகினி த‌ன்னுடைய‌ க‌ண‌வ‌ன் மேல் இருக்கும் காத‌லை விடாம‌ல் இருக்கா. அவ‌ரை விட்டுங்க‌ நான் இங்கேயே இருக்கேன் என்று சொல்லும் இட‌த்தில் கூட‌ க‌ண‌வ‌ன் மேல் காத‌ல் கொண்ட‌வளாக‌வே இருக்கா ராகினி.

ச‌ரி... இந்த‌ க‌ண்ண‌கி முன்னே “இப்ப‌டி இருக்க‌றவ‌ங்க‌ளை சுட்டுக் கொல்ல‌ தானே உங்க‌ளுக்கு துப்பாக்கி கொடுத்திருக்காங்க‌ன்“னு சொன்ன‌வ‌ “தேவ் த‌ப்பாபில்லாம‌ சுட்டு இருக்க‌மாட்டாரு“ என்று முர‌ண்ப‌டும் அதே அவ‌ங்க‌ த‌ன்னை கொல்ல‌ வ‌ரும் நேர‌த்தில் கூட‌ “என்னை கொல்ல‌ நீ யாருன்னு“ கேட்கும் புர‌ட்சி பெண், த‌ன்னை ச‌ந்தேகித்த‌ க‌ண‌வ‌னுக்கு எதுவுமே சொல்லாம‌ல் அந்த‌ர‌த்தில் தொங்கிய‌ப‌டி முடிக்க‌ப்ப‌டிருக்கும் அவ‌ள் கதாபாத்திர‌ம் இன்னும் என்னுள் பேசிய‌ப‌டி இருக்கிற‌து. இதைதானே ம‌ணிரத்னம் நீங்க எதிர்பார்த்தீங்க‌.



எதிர்ம‌றை க‌தாநாய‌க‌ர்க‌ள் மிக‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள் என்று காட்சிப்ப‌டுத்தும் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளை நிஜ‌க்க‌தைக‌ளை கேட்டும் பார்த்தும் இருந்த‌ கார‌ண‌த்தால் ராவ‌ண‌ன் மேல் இர‌க்க‌ம் வ‌ந்தாலும் மணிரத்னம் மேல் பெரும் ஏமாற்ற‌ம் வ‌ந்த‌தே மிக‌வும் உண்மை.

பெட்ட‌ர் ல‌க் நெஸ்ட் டைம் ம‌ணிர‌த்ன‌ம் & சுஹாசினி.