Showing posts with label ஐந்திணை ஐம்ப‌து. Show all posts
Showing posts with label ஐந்திணை ஐம்ப‌து. Show all posts

Saturday, September 24, 2011

வெயில் பட்ட புல்லென வாடும் தலைவி

வெயிலுக்கு புல் வாடுவதும், பின் மழை பொழிய பொலிவு பெறுவதும் இயற்கையே. மழையை பொழிதலை கவிஞர்கள் காதல் மற்றும் காதல் சார்ந்த உணர்வுகளுக்கு ஒப்பிடுவதும் அதற்கு உண்டான சூழலாக வர்ணிப்பதும் அந்த நாளில் இந்த நாள் வரை தொடர்கின்றது.


பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்! -
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்?


வள்ளி - கொடி
பொற்ப - பொலிய
கானம் - காடு

"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள்.

-Chennai library

திருந்திழாய்! என்ன அழகான விளித்தல் இது. இந்த பாடல் பொழிப்புரை இல்லாமலேயே புரிவது மிக வித்தியாசமன்றோ.

Friday, September 24, 2010

காத‌ல் வ‌ந்தால்

காதல் வந்தால் பதினெட்டு/இருப‌து வருடம் வளர்ந்த பெற்றோர் மறந்து, சுற்றம் சுழல் மறந்து, தோழியர் மறந்து, தோட்டத்து மல்லிகைகளை, அக்கம் பக்கத்து சிறுவர் சிறுமியரோடு கழித்த காலங்கள் மறந்து போவது எந்த காலத்திலும் மட்டும் அல்ல அக்காலமே இருந்து இருக்கின்றது.

என் தோழி ஒருத்தி சொன்னாள் சினிமாவில் காத‌ல் எளிது, பெற்றோர்க‌ளை வில்ல‌த்த‌ன‌மாக‌ காட்டி விடுக்கின்றார்க‌ள். ஆனால் நிஜவாழ்க்கையில் அது அப்ப‌டி இல்லை. என்ன‌ ப‌ண்ற‌துன்னே தெரியாது என்றாள். அப்ப‌டி பாச‌த்தை கொட்டும் தாயோருத்தியின் ம‌ன‌நிலையில் எழுதுப்ப‌ட்ட‌ இந்த‌ பாட‌ல்...

பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும்,
ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,
காய்ந்து கதிர் தெறூஉம் காடு?


ஆயம் - தோழியர் கூட்டம்

"பாலோடு ஒப்பிட்ட வல்ல ஆய்ந்த மொழிகளையுடைய என் மகள், காய்தெரிக்கும் சூரிய கதிர்களால் வெப்பம் மிகுந்த பாலைக் காட்டில், தன்னுடைய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாய் கொண்ட பைங்கிளிகள், தோழியர் கூட்டம் ஆகியவை ஒன்றையேனும் நினைக்காமல், காதலன் பின் செல்வாளோ என்ன?"

Sunday, January 24, 2010

ஆதலினால் காதல் செய்வீர்

ஆண்டாள் சூடிக் கொடுத்தவள், நாச்சியார் திருமொழியில் காதலாகி கசிந்துருகி நூற்றி நாற்பத்தி மூன்று கவிதைகள் பாடியுள்ளார்.

நாச்சியார் திருமொழி ‘தையொரு திங்கள்‘ என்று தொடங்கும் முதல் பத்து பாடல்கள் மன்மதனுக்கு கோதை நோன்பிருந்து திருமாலை கேட்பது போல் வரும்.

‘நாமமாயிரம்‘ என்று தொடங்கும் இரண்டாம் பத்து பாடல்களில் மணல் வீடு கட்டி விளையாடும் சிறுமி போல திருமாலிடம் "எங்கள் சிற்றில்வந்து சிதையேலே" என்று உள்ளம் கொள்ளை கொள்ள பாடி இருப்பார். ஒரு ஐந்திணை ஐம்பதின் பாடலும் அதே விதமாக இருக்கின்றது.

கொடுந் தாள் அலவ ! குறை யாம் இரப்பேம்;
ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன் நெடுந் தேர்
கடந்த வழியை எம் கண் ஆரக் காண,
நடந்து சிதையாதி, நீ!

பார்க்கவே அச்சுறுத்தும் கால்களை உடைய வண்டே, உன்னை குறை கூறுவதாக கொள்ளாதே, வேண்டி இரங்கி கேட்கின்றோம், ஓயாமல் ஒடுங்காமல் ஒலிக்கும் கடலிருக்கும் நெய்தல் நிலத் தலைவனின் நீண்ட நெடுந்தேர் கடந்த வழியையானும் எங்கள் கண்கள் ஆர மனம் நிறைய காண வேண்டும். அதனால் அத்தேர் சுவடின் மேல் நடந்து சிதைக்காதே.

நண்டூரி எங்காவது தேர் சுவடு அழியுமா? அந்த தலைவியின் பிரிவுத்துயர் பாருங்கள்.

அவள் தலைவன் மேல் கொண்ட காதல் ஏக்கத்தை இதை விட நுணுக்கமாக மென்மையாக உணர்த்த முடியுமா ? அவன் சென்ற வழியை தன் மேல் விட்டு சென்ற சுவட்டை யாரும் சிறிதளவு கூட கலைத்திடக்கூடாது என்ற திண்ணம் பாருங்கள்.

ம்ம்ம்ம்ம்ம்..... என்ன சொல்ல.... சங்க காலத்தில் மிக சிறப்பாக காதலித்திருக்கின்றார்கள் ஆதலினால் காதல் செய்வீர்.

ஐந்திணை ஐம்பதில் ரசனையும், உவமையும்

ஐந்திணை ஐம்ப‌தில் ர‌ச‌னையும், நாட்டின் வ‌ள‌மையும், கூர்ந்த‌ உவ‌மைக‌ளும் நிர‌ம்பிக் கிட‌க்கின்ற‌ன‌.
அவ‌ற்றில் சில‌ இங்கே.
crown "கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு"
அழ‌கிய‌ சிறு நாரையின் (கொக்கின்) குத்துக்கு அஞ்சி, வாளை மீன்க‌ள் நீல‌ ம‌ல‌ர்க‌ளிட‌ம் ம‌றைந்து விளையாடும் வ‌ள‌மை மிக்க‌ ஊரில் வாழ்ப‌வ‌னுக்கு.... ர‌ச‌னை வ‌ள‌மை அறிவு....
000
lotus1

"அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன்"
அவிழ்ந்து ம‌ல‌ர்ந்த‌ தாமரை பார்க்க‌ நெருப்பினை போல‌ இருக்கும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ மல‌ர்ந்த‌ தாம‌ரை நிறைந்த‌ வ‌ய‌ல்க‌ளை கொண்ட‌ ஊரில் வாழ்ப‌வ‌ன்.....
உவ‌மை அறிவு கூட‌வே நாட்டின் வ‌ள‌மை...

000
river sand "நுண் அறல் போல நுணங்கிய ஐங் கூந்தல்,
வெண் மரல் போல நிறம் திரிந்து"
ஆற்றின் நுண் ம‌ண‌ல் போல் நுட்பமாக‌ இணைந்திருந்த‌ ஐவ‌கைக் கூந்த‌ல், வெண் க‌ற்றாழை போல‌ நிற‌ம் மாறி போன‌து....
ஆஹா என்னே உவ‌மை என்னே ப‌ருவ‌ம‌ற்ற‌த்தை உண‌ர்த்தும் அறிவு...
000
tiger1 "உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்,
எதிரி முருக்கு அரும்ப"
உதிர‌த்தைத் தோய்ந்த‌ வேங்கையின் ந‌க‌ம் போல‌ சிவ‌ந்து அரும்பி இருக்கும் முருங்கை ம‌ல‌ர்க‌ள்...
என்ன‌ நுணுக்க‌மான‌ நுட்ப‌மான‌ நோக்குத‌ல் வித்தியாச‌மான‌ உவ‌மை...
வீர‌த்தை உண‌ர்த்தும் உவ‌மை...
000
lizard1 "பொரிப் புறப் பல்லிச் சினை ஈன்ற புன்னை
வரிப் புற வார் மணல்மேல் ஏறி"
சினைப்ப‌ல்லி பொரிந்த‌ முட்டைகளையொத்த புன்னை ம‌ல‌ர்க‌ள் இரைந்து கிட‌க்கும் ம‌ண‌ல்மேட்டில் மேலேறி...
இதுவும் மிக‌ வித்தியாச‌மான‌ ஒப்பீடு...
மேலும் நுட்ப‌மான‌ நோக்குத‌லுக்கு ம‌ற்றுமொரு எடுத்துக்காட்டு.
000
beach11 "எக்கர் இடு மணல்மேல் ஓதம் தர வந்த
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப !"
அலை மோதி மோதி எழுந்த‌ ம‌ண‌ல் மேல், அவை கொண்டு வ‌ந்த‌ முத்துக‌ள் நின்று இமைப்ப‌து போல‌ ஒளிவீசும் உப்ப‌ங்க‌ளிக‌ளை கொண்ட‌வ‌னே...
இங்கே முத்தை உப்போடு ஒப்பீடு செய்த‌து போல் கொண்டாலும்,
முத்துக‌ள் உப்பு போல் கொட்டி கிட‌க்கும் என்று கொண்டாலும்
வ‌ள‌மை, உவ‌மை... அருமை.
000

Tuesday, November 24, 2009

பிரிவின் துயர்

சங்கப்பாடல்களின் பிரிவின் துயரை பெரும் அளவில் பெண்களே பேசி இருக்கின்றார்கள். பசலை படித்திருத்தல், கைவளை கழன்று விழுதல் என்று பெண்ணிற்கே பிரிவின் துயர் அதிகம் என்று காட்டி உள்ளார்கள் சங்க காலத்து பெரியோர். அப்படிப்பட்ட பிரிவின் ஆதங்கமாக ஐந்திணை ஐம்பதில் பாலைத் திணையிலிருந்து ஒரு பாடல்.

"கடிது ஓடும் வெண்தேரை, 'நீர் ஆம்' என்று எண்ணி,
பிடியோடு ஒருங்கு ஓடி, தான் பிணங்கி, வீழும்
வெடி ஓடும் வெங் கானம் சேர்வார்கொல், - நல்லாய்! -
தொடி ஓடி வீழத் துறந்து?"

"நல்ல குணங்கள் நிறைந்த தோழி, கடிது ஓடும் கானல் நீரை "நீர் ஆம்" என்று எண்ணி, ஆண்யானை தன் துணையோடு நெடும் தூரம் அலைத்தோடி பின் கால் ஓய்து விழும், வெடிப்புகளும் வெம்மையும் நிறைந்த அப்படிப்பட்ட கொடுங் கானம் வழி, என் கை வளையல்கள் கழண்டு விழும் படி என்னை துறந்து செல்வாரோ நம் தலைவர்?"

இந்த சங்கக்கவிதையை படிக்கும் போது சமீபத்தில் படித்த பாலைத் திணை என்ற தலைப்பில் எழுதப்பட்ட பாலைத்திணை காயத்ரியின் கவிதை நினைவிற்கு வருகின்றது.

Tuesday, March 24, 2009

ஒல்லென‌ ஒலிக்கும் புன‌லென‌ புல‌ம்பும் தலைவியும்

ச‌ங்க‌ கால‌த்தில் பெண்க‌ள் ம‌டைமை போற்றிய‌த‌ற்க்கு ப‌ல‌ ஆதார‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. இங்கே நாம் பார்க்க‌ இருக்கும் ஐந்திணை ஐம்ப‌து பாட‌ல்க‌ளில் ம‌ருத‌த் திணை பாட‌ல்க‌ள் அனைத்திலும் த‌லைவ‌ன் த‌லைவிகிடையேயான‌ உய‌ர்ந்த‌ப‌ட்ச‌ ஊட‌லும், த‌லைவியின் வேத‌னையும் புல‌ப்ப‌டுகின்ற‌ன‌.

கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
காரத்தின் வெய்ய, என் தோள்! 24

கோலம் - அழகு
குருகு - நாரை
"பாணனே! அழகிய சிறிய நாரையினது குத்துதலுக்கு அஞ்சிக் குளிர்ந்த வாளை மீன்கள் நீல மலர்க் கூட்டத்தில் புகுந்து மறைந்து கொள்ளும்படியான மருத நிலத்தூர்த் தலைவனுக்கு முன்பெல்லாம் கூடும்போது எம்முடைய தோள்கள் அவருக்குச் சந்தனக் குழம்பு போன்று குளிர்ச்சியாக இருந்தன. ஆனால் இப்போதோ புண்ணிற்கு இடும் மருத்துவக் காரத்தைப் போல வெப்பமாய் உள்ளன" என்று தலைவி கூறினாள்.


இப்படி த‌லைவ‌னுக்கு தன் வெறுப்பிருக்குமோ என்ற‌ அய்ய‌த்துக்கும் அத‌ற்கு முன் பின்வ‌ரும் பாட‌ல்க‌ளில் ஆதார‌ம் இருக்கின்ற‌ன‌ த‌லைவ‌ன் ப‌ர‌த்தை வீட்டுக்கு செல்கின்றான் அவ‌னை த‌ட்டி கேட்க‌ கூடாதா என்று அவ‌ன் ந‌ண்ப‌ரான‌ பாண‌றிட‌ம் கேட்கின்றாள்.


பெய் வளைக் கையாய்! பெரு நகை ஆகின்றே -
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப,
கை புனை தேர் ஏறிச் செல்வானைச் சென்று இவன்
எய்தி, இடர் உற்றவாறு! 26

வதுவை - திருமணம்
"வளையல்கள் அணிந்த கைகளையுடைய தோழியே! திருத்தப் பெற்ற மருத நிலத்து நன்செய் வயல்கள் சூழ்ந்த ஊர்க்குத் தலைவன், பரத்தையர் புதுமண விழாக் கொண்டாடும் பொருட்டுத் தேரின் மீது அமர்ந்து பரத்தையர் பால் செல்லும் போது, என் புதல்வன் எதிரே போய்ப் நின்றதால், தலைவன் பரத்தையரைப் புதுமணம் செய்ய முடியாது துன்பம் அடைந்த நிலையானது எனக்கு மிகுந்த நகைப்பினையுண்டாக்குகின்றது" என்று புதல்வனை முனிந்து தலைமகள் மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தாள்.


இந்த‌ நிலையில் வெளிப்ப‌டும் சிரிப்பு விர‌த்தியாலா அல்ல‌து அப்ப‌டியாவ‌து அந்த‌ திரும‌ண‌ம் நின்ற‌து என்ற‌ ச‌ந்தோச‌மா? இந்த‌ த‌லைவியின் நிலை எவ்வ‌ள‌வு வேத‌னை இல்லையா?
இப்ப‌டி இருந்தாலும் இந்த‌ த‌லைவியின் ம‌டைமையை பாருங்க‌ள்.

'ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும்
புல்லேன் யான்' என்பேன்; - புனையிழையாய்! - புல்லேன்
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன் -
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்? 29

வியல் - அகன்ற
இழை - அணிகலன்
"அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! 'ஒல்' என்று ஒலிக்கும்படியான ஒலி புனல்(அருவி) சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனது அகன்ற மார்பினைத் 'தழுவ மாட்டேன்' என்று அவனைக் காணுவதற்கு முன் நினைத்திருப்பேன். ஆயினும் என் தலைமகனுக்கு ஊழியம் புரிந்து நடக்கக் கூடிய தன்மையுடையவள் ஆதலால் அவனைக் கண்டபின்னும் 'தழுவமாட்டேன்' என்று கூறி மறுக்கவா முடியும்?" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள்.


:) என்னென்று சொல்வ‌து இந்த‌ த‌லைவியை. இது தான் காத‌ல் என்ப‌தா? இப்ப‌டிப்ப‌ட்ட‌ காத‌ல் அவ‌ளுக்கு தேவை தானா? ஒல்லென் ஒலிக்கும் புன‌ல் எவ்வ‌ள‌வு அழ‌கான‌ காட்சிப‌டுத்துத‌ல் இந்த‌ பாட‌லில் இருக்கின்ற‌து.

பாட‌ல்க‌ளும் விள‌க்க‌ங்க‌ளும் சென்னை லைப்ர‌ரியில் இருந்து எடுக்க‌ப்ப‌ட்ட‌து.

Wednesday, September 24, 2008

யானையின் மெல்லிய நடை

கொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு, -
மடி செவி வேழம் - இரீஇ, அடி ஓசை
அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்
துஞ்சா, சுடர்த்தொடி கண். 16

வேழம் - யானை
தொடி - வளையல்

"வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள்.

நன்றி:சென்னை லைப்ரரி.

இந்த பாடலில் இயற்கையான பெண்ணின் குணமான, பிரியமானவர் மீதான அதீத அக்கரையும், மிதமிஞ்சின கற்பனையில் அது நடக்குமோ இது நடக்குமோ என்ற பயமும், அவருக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்ற கவலையும் சேர்த்து அவளை தூங்க விடாமல் வாட்டுவது போல் மேலோட்டமாக கொள்ளலாம்.

ஆயினும் அடிபட்ட யானையாக அவளையும், சினம் கொண்ட புலியாக அவள் இல்லத்தாரையும் பொருந்தி பார்க்கலாம். அவள் பசலை படர்ந்திருப்பது அவள் பெற்றோர்க்கு தெரிய கூடாதென்று மறைக்க பாடுபடுவதை தலைவனுக்கு குறிப்பாக உணர்த்த தோழி இவ்வாறு உரைத்ததாக கொள்ளலாம்.

எல்லாம் காதல் படுத்தும் பாடு.

Thursday, August 5, 2004

விர‌க‌தாப‌ம் - உயிர் பிள‌க்கும் ரீங்கார‌ம், வேல் போல் தாக்கும் குழ‌லோசை

ஐந்திணை ஐம்ப‌து திணைக்கு ப‌த்து பாட‌லாக‌ ஐம்ப‌து பாட‌ல்க‌ள் எல்லா திணையிலும் த‌லைவ‌ன் த‌லைவி, தோழி என்று அனைவ‌ரும் பாடி இருக்கின்றாங்க‌.

குறிஞ்சி திணையில் த‌ன் விர‌க‌ தாப‌த்தை இத்த‌னை வெளிப்ப‌டையா பேசி இருக்கின்றாள் ஒரு த‌லைவி. மாலை ஆகிவிட்ட‌து. "வ‌ண்டுக‌ள் ரீங்கார‌ம் செய்வ‌து அவ‌ளுக்கு உயிர் பிள‌ப்ப‌தை போலிருக்கின்ற‌தாம்." ம‌ற்றுமொறு பாட‌லில் "சிறு குழலின் இனிய ஓசை அவ‌ளை வேல் கொண்டு தாக்குவது போலிருக்கின்றதாம்". காத‌ல் நோய் கொடிய‌த‌ல்ல‌வா எப்போதும்.


முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி
செல்சார்வு உடையார்க்கு இனியவாய், - நல்லாய்! - மற்று
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை
ஈரும், இருள் மாலை வந்து.


தும்பி - வண்டு

மாலைக் காலமாகிய வாள் தோன்றி, கரியவண்டுகள் முல்லை மலர்களில் படிந்து ரீங்காரம் செய்து, தலைவரைச் சார்ந்திருக்கின்ற மகளிர்க்கு இன்பத்தைச் செய்கின்றது. ஆனால் பிரிவினால் தனித்துத் துணையில்லாது தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற எம்முயிரைப் பிளக்கின்றது. யான் எவ்வாறு பொறுத்துக்கொள்வேன்.


------------------------------------------------------------------------------------


தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை
ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால்,
சிறு குழல் ஓசை, - செறிதொடி! - வேல் கொண்டு
எறிவது போலும் எனக்கு.


ஆன் - பசு
தொடி - வளையல்

கைகளில் நிறைந்த வளையல்களைக் கொண்டுள்ள தோழியே, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வந்த கதிரவன் மாலையில் மேற்குத் திசையில் மறைந்த காலத்து சிவந்ததாய்க் காணப்படும் மாலைப்பொழுதில் அருமையான பசுக்கூட்டங்களின் பின்னால் வரும் இடையன் மகிழ்ச்சியோடு ஊதுகின்ற சிறு குழலின் இனிய ஓசையானது எனக்கு வேல் கொண்டு தாக்குவதுபோல் மிகுந்த துன்பத்தைத் தருகின்றது.

ந‌ன்றி சென்னை லைப்ர‌ரி

Saturday, January 24, 2004

மழை மேக‌ம் துளி க‌ண்ணீர்

ஐந்திணை ஐம்ப‌தில் ஒரு பாட‌ல்.

கோடு உயர் தோற்ற மலைமேல் இருங் கொண்மூக்
கூடி நிரந்து தலை பிணங்கி, ஓடி,
வளி கலந்து, வந்து உறைக்கும் வானம் காண்தோறும்,
துளி கலந்து வீழ்தரும், கண். 5


கோடு - சிகரம்
கொண்மூ - மேகம்
வளி - காற்று

என் இனிய தோழியே! உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடி, ஒன்றோடொன்று மோதி, காற்றோடு கலந்து மழைபொழியத் துடிக்கும்படியான, வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும்.

ந‌ன்றி சென்னை லைப்ர‌ரி


ம்ம்ம்ம் த‌லைவிக்கு மேக‌ம் கூடுத‌லை க‌ண்டு க‌ண்ணீர் வ‌ர‌ கார‌ண‌ம் என்ன‌வாக இருக்கும்? :)

கூடலோ கூடிய‌தோ ஞாப‌க‌ம் வ‌ந்திருக்குமோ?(ம‌ழையை புண‌ர்ச்சியின் குறியீடாக‌ பார்ப்ப‌து தானே க‌விஞ‌ர்க‌ளின் வ‌ழ‌க்க‌ம்)

என‌க்கு இங்கே அவ‌னை ப‌ற்றிய‌ இவ்வ‌ள‌வு உண‌ர்வுக‌ள் அங்கே அவ‌னுக்கு இருக்குமோ என்ற‌ ச‌ந்தேக‌ம், வேத‌னையோ?

சென்ற‌ கார்கால‌த்தில் மோக‌ம் கொண்டோம், இப்போது நான் ம‌ட்டும் ம‌ழை மேக‌ம் க‌ண்டு க‌ண்ணீர் சிந்திய‌வாறென்றா